பல்லவி
எந்நேரமும் உன் நாம(மு)ரைப்பதே
என் நேமம் அன்னையே
அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்(தெ)ன்னை எப்போதும்
மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)
சரணம்
சரணம் 1
ஏ(ன)ம்மா தாமத(மே)(ன)ம்மா
என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா
உன் நினைவே என் நேம(ம)ல்லவோ
உ(ன்னு)ள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்நேரமும் உன் நாமம்-உரைப்பதே
என் நேமம் அன்னையே
அனுபல்லவி
புன்னகையுடன் கண்-பார்த்து-என்னை எப்போதும்
மன்னிப்பதும் நீயே என் தாயே (எந்நேரமும்)
சரணம்
சரணம் 1
ஏன்-அம்மா தாமதம்-ஏன்-அம்மா
என்னை ரக்ஷிக்க உனக்கு பாரமா
உன்-நினைவே என்-நேமம்-அல்லவோ
உன்-உள்ளம் கரையவும் நான் சொல்லவோ (எந்நேரமும்)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
அகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்
Top